ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 9.00 க்கு நடைபெற்றது. கடந்த 18 ம் தேதி முதல் யாக சாலையில் வேத விற்ப்ன்னர்கள் மந்திரம் முழங்க, ஹேமகுண்டங்கள் வளர்த்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இவ்விழாவினை ஒட்டி ஸ்ரீ வடபத்தர சயனர் சன்னதி கோபுரம் தங்க தகடுகள் பதிக்கும் பணியும் மற்றும் தமிழக அரசு சின்னமான ராஜகோபுர திருப்பணியும் முடிவுற்றதை ஒட்டி, இன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் கோபுரத்திற்கு பட்டாசாரிகள் வேத மந்திரம் முழங்க குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவினை காண ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமோ நாராயணா என்ற கோஷத்தை முழங்கி இறைவனை வழிபட்டு சென்றனர். இந்த கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications