அடடா.. மங்களத்துக்கு சளித்தொல்லை.. கேம்ப்புக்கு போக முடியலை!
யானை மங்களம் புத்துணர்ச்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை.
கும்பகோணம்: மங்களத்துக்கு சளி இன்னும் குறையவே இல்லை. அதனால் நாளை ஆரம்பிக்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமுக்கு மங்களம் செல்லவில்லை என கூறப்படுகிறது.
எப்பவுமே வருஷா வருஷம் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த முகாம் 48 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு மெடிக்கல் செக்கப் முழுமையாக செய்யப்படும். அதோடு சத்தான சாப்பாடு அதாவது கூந்தல் பனை, ஆலைக்கரும்பு, பச்சிளம் சோளத்தட்டை மற்றும் பாசிபயிறும் கொள்ளும், வெல்லமும் சேர்த்து கவளமாக கொடுக்கப்படும்.

மன அழுத்தம் குறையும்
அத்துடன் உடற்பயிற்சியும் தரப்படும். 48 நாள் கழித்து முகாமிலிருந்து திரும்பி வரும்போது யானைகள் எல்லாம் ஃப்ரஷ் ஆகி விடும். அவைகளின் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக இருக்கும். கடைசி நாளில் அறநிலையத்துறை அதிகாரிகளும் பக்தர்களும் இந்த யானைகளை வழியனுப்பி வைப்பார்கள்.

உடம்பு சரியில்லை
இப்படித்தான் நாளை முகாம் தேக்கம்பட்டியில் ஆரம்பிக்க உள்ளது. ஆனால் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள யானை மங்களத்துக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை. முன்பு ஒருமுறை மங்களத்தை முகாமுக்கு கொண்டு சென்றார்கள்.

தீவிர சிகிச்சை
ஆனால் அங்கிருக்கும் மற்ற யானைகளுக்கும் சளி பரவிவிடும் என்பதால் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர். அப்போது பிடித்த சளி, இன்னும் மங்களத்துக்கு சரியாகவில்லையாம். அதற்கான சிகிச்சையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முகாமில் என்னவெல்லாம் மருத்துவ வசதிகள் செய்யப்படுமோ அதெல்லாம் இப்போது மங்களத்துக்கு தரப்பட்டு வருகிறது.

6 வருடங்கள்
எனவே இப்போது மீண்டும் முகாமுக்கு சென்றால், மற்ற யானைகளுக்கும் சளி பரவிவிடும் என்பதால் இப்போதும் மங்களத்தால் செல்ல முடியவில்லை. மங்களம் முகாமுக்கு போய் 6 வருஷமாகிறதாம்!!












Click it and Unblock the Notifications