கே பாலச்சந்தருக்கு அரசு மரியாதை அளித்திருக்க வேண்டாமா? - குஷ்பு கேள்வி
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே பாலச்சந்தருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்து இருக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நூறு படங்களுக்கு மேல் இயக்கிய பாலசந்தர் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று முன்தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ரஜினி, நெப்போலியன், சரத்குமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

ஆனால் அவர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்க வேண்டும் என்று குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மறைந்த கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்றோரின் இறுதிச் சடங்கு பெங்களூரில் அரசு மரியாதையுடன்தான் நடந்தது.
கேரளாவிலும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அது போல் பாலசந்தரின் உடல் தகனமும் அரசு மரியாதையுடன் நடந்திருக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை கூட அரை குறையாகத்தான் இருந்தது.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதனையாளர்களை மதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications