ஏப்ரல் 5-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை குஷ்பு தீவிர பிரசாரம்- திமுக அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு ஏப்ரல் 5-ந் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் தீவிர பிரசார மேற்கொள்வார் என்று சுற்றுப் பயண விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால் பேராசிரிய அன்பழகன், கனிமொழி உள்ளிட்ட திமுக முன்னணியினர் பிரசாரம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், முன்னணி பேச்சாளர் குஷ்புவின் சுற்றுப் பயண விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைமைக் கழகம் குஷ்புவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண விவரத்தை வெளியிட்டுள்ளது. திருச்சியில் ஏப்ரல் 5-ந் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் குஷ்பு 22-ந் தேதியன்று திருவள்ளூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
குஷ்பு பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள்:
5.4.2014-திருச்சி
6.4.2014-கரூர்
7.4.2014-ஈரோடு
8.4.2014-நீலகிரி
9.4.2014-பொள்ளாச்சி
10.4.2014-கோவை
11.4.2014-திருப்பூர்
12.4.2014-சேலம்
13.4.2014 -தருமபுரி
14.4.2014-கிருஷ்ணகிரி
15.4.2014-வேலூர்
17.4.2014-ஆரணி
18.4.2014-திருவண்ணாமலை
19.4.2014-காஞ்சிபுரம்
20.4.2014-அரக்கோணம்
21.4.2014-திருப்பெரும்புதூர்
22.4.2014-திருவள்ளூர்
இவ்வாறு திமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications