எனக்கு அப்பவே கோவில் கட்டினாங்க... குஷ்பு பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவறு செய்தால் நான் யார் காலிலும் விழ தயங்கமாட்டேன்... அதே நேரத்தில் தவறு என்னிடம் இல்லை என்றால் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று கூறியுள்ளார் குஷ்பு. நான் நடிகையாக இருக்கும் போதே கோவில் கட்டினார்கள். இனிமேல்தான் நான் புகழடைய வேண்டும் என்ற அவசியல் இல்லை என்றும் கூறினார்.

நடிகையாக, சின்னத்திரை தயாரிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பன்முகத்தன்மை கொண்டவர் குஷ்பு.

டிவி நிகழ்ச்சியில் நடனமாடுவார்... ஏன் சில நேரம் பிடித்த நடிகருக்கு முத்தம் கொடுத்து டி.ஆர்.பியை ஏற்றவும் தயங்கமாட்டார். அரசியல் மேடையில் வெளுத்து வாங்குவார் குஷ்பு.

பன்முகத்தன்மை கொண்ட குஷ்புவை ' மகளிரும் மக்கள் ஆட்சியும்' என்ற நிகழ்ச்சிக்காக புதிய தலைமுறையினர் பேட்டி எடுத்தனர். சாதாரண பேட்டியாக இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே, நடந்து கொண்டே, கோவில் குளம் என்று ஒரு பயணமாக இருந்தது பேட்டி.

மகள்கள் மீதான பாசம்

மகள்கள் மீதான பாசம்

நடிகையாக, அரசியல் கட்சியில் ஆக்டிவான தலைவியாக இருந்தாலும் ஒரு அம்மாவாக மகள்களின் மீதான அதீத பாசம் வெளிப்படவே செய்தது. மூத்த மகள் செய்தியாளர் ஆக ஆசைப்படுவதாகவும், இளையமகள் சினிமா இயக்குநராக ஆசைப்படுவதாகவும் கூறினார் குஷ்பு.

சுந்தர்.சிக்கு மரியாதை

சுந்தர்.சிக்கு மரியாதை

அரசியல் கட்சித்தலைவி, சினிமா நடிகை, வீட்டுத்தலைவி, குழந்தைகளுக்கு அம்மா, பாத்திரம் கழுவுகிறேன்.. கக்கூஸ் கூட கழுவறேன் அதுவும் என் வேலைதான்.

எனக்கு பின்னால் இருக்கும் சுந்தர் சி. என்ற பெயருக்கு ஒரு மரியாதையை கொடுக்க வேண்டும். நிறைய பேருக்கு அது தெரியவில்லை. எதையாவது ஏழுதுறாங்க என்று கவலைப்பட்டார் குஷ்பு.

காலில் விழுவேன்

காலில் விழுவேன்

நான் தப்பு செய்தால் குழந்தையின் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்பேன். தப்பு செய்யா விட்டால் எவனா இருந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதுதான் என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம்.

அரசியல்வாதியாக ஆசையா?

அரசியல்வாதியாக ஆசையா?

அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் கொள்கையோட இருங்கள் என்று கூறிய குஷ்பு, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் உங்களுக்கான தனித்துவத்தை விட்டுக்கொடுத்து விடாதீர்கள் என்றார்.

கட்அவுட், புகழ்

கட்அவுட், புகழ்

நான் கட் அவுட் வைப்பார்கள் என்றோ, புகழுக்காகவோ, தலைப்புச்செய்தியில் தினசரி வரவேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. நான் நடிகையாக இருக்கும் போதே எனக்கு கோவில் கட்டிவிட்டனர். இனிமேல் நான் எதையாவது செய்து தலைப்புச் செய்தியில் வரவேண்டும் என்ற அவசியமில்லை. நிறைய பணமும் சம்பாதித்து விட்டேன். எனவே அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியல் எதுவும் இல்லை என்று கூறினார் குஷ்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+