தந்தை மறைந்த சோகத்துடன் தேர்வெழுத வந்த கலாபவன் மணி மகள்.. குஷ்பு பாராட்டு!
பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணியின் மகள் தந்தை மறைந்த சோகத்தை மறைத்துக் கொண்டு தேர்வெழுதினார். இதை அறிந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் குஷ்பு.
கலாபவன் மணி கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை.

கலாபவன் மணிக்கு அவரது மகள் ஸ்ரீலெட்சுமி மீது மிகுந்த பாசம். ஸ்ரீலெட்சுமி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தந்தை இறந்த சில நாட்களில் அவருக்கு பள்ளி இறுதி தேர்வு நடந்தது. சோகத்தை மறைத்துக் கொண்டு ஸ்ரீலெட்சுமி தேர்வு எழுதச் சென்றார்.
அங்கு தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறினர். தந்தையின் நினைவு தாளாமல் அழுதார் ஸ்ரீலெட்சுமி. இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. தந்தை இறந்த சோகத்தை மறைத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்ற ஸ்ரீலெட்சுமியை பலரும் பாராட்டினர்.
இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, கலாபவன் மணியின் மகளை பாராட்டி கருத்து தெரிவித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தை இறந்த சோகம் மறையும் முன்பு அதை மனதில் பூட்டி வைத்து தேர்வு எழுதச் சென்ற ஸ்ரீலெட்சுமியை பாராட்டுவ"தாக குஷ்பு தெரிவித்துஉள்ளார்.












Click it and Unblock the Notifications