குஷ்புவின் 2வது ரவுண்டு பிரசாரம்.. நாமக்கல்லில் இன்று ஆரம்பித்து 14ம் தேதி மயிலையில் முடிகிறது
சென்னை: காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பிரசாரகரான நடிகை குஷ்பு இன்று தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்கி 14ம் தேதி சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அவர் ஏற்கனவே ஒரு சுற்றுப் பிரசாரத்தை முடித்து விட்டார். இந்நிலையில், இன்று அவரது 2வது கட்டப் பிரசாரம் தொடங்கியுள்ளது.

அவரது பிரசாரத் திடடம்:
8ம் தேதி - நாமக்கல், முசிறி, திருச்சி.
9 - பெரம்பலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில்.
10 - பாபநாசம், பட்டுக்கோட்டை
11 - கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர
12 - கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், சூலூர், கோவை தெற்கு.
13- சென்னை திரும்புகிறார்.
14 - மயிலாப்பூர், அம்பத்தூர், மதுரவாயல் - பிரசாரம் நிறைவு.












Click it and Unblock the Notifications