தமிழகத்தில் 6 மணி நேரத்துக்கு ஒரு கொலை நடக்கிறது - குஷ்பு கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 6 மணி நேரத்திற்கு ஒரு கொலை நடப்பதுடன் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் ஏஐடியூசி-யின் உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பாக மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு டெல்லியிலிருந்து கட்சி நிர்வாகிகள் வருவார்கள் என்றார்.

kushboo says about law and order in tamilnadu

மேலும், தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் சாதிய கொலைகள் நடந்துள்ளன.

சாதியை மையமாக வைத்து நடைபெறும் கொலைகளை பார்க்கும் போது நாம் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் 6 மணி நேரத்திற்கு ஒரு கொலை நடப்பதுடன், ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+