வாய்ப் பேச்சு மட்டும் போதுமா.. செயலில் காட்ட வேண்டாமா.. மோடிக்கு குஷ்பு கேள்வி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் மட்டும் நாட்டைக் காப்பாற்றாது. அதனை செயலிலும் காட்ட வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ தனது டுவிட்டரில், மன் கி பாத் நடத்தினால் போதுமா? வெறும் வார்த்தைகள் மட்டும் நாட்டை காப்பாற்றாது.

பிரதமர் அதனை செயலிலும் காட்ட வேண்டும். பிரதமர் எப்போதும் பொய் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
Mann ki baat kahen?Bhaashan alone cnnt save the country..u need 2 deliver Mr.PM..All u hve bn delivering is false promises,nthng more..
— khushbusundar (@khushsundar) April 4, 2015 மேலும், ஸ்மிருதி இரானி கோவாவில் கடை ஒன்றின் உடை மாற்றும் அறையில் கேமிரா வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார். இதனை நீண்ட நாட்களுக்கு முன்னரே நான் சொன்னேன். உடைகளை எப்போதும் கடைகளில் அணிந்து பார்க்க வேண்டாம் எனவும் கூறியிருந்தேன் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Kudos to #SmritiIrani for taking up the CCTV camera issue in goa. . I made it a point long back not to try any clothes in any showrooms. .
— khushbusundar (@khushsundar) April 4, 2015 











Click it and Unblock the Notifications