5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் பரிதாப மரணம்!
கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரை அடுத்த கலிங்கமலையை சேர்ந்தவர் சம்பத். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிருந்தா லட்சுமி. பிருந்தாலட்சுமி கடந்த 5 ஆண்டுகளாக நோயின் பிடியில் சிக்கியிருந்தார். அதில் இருந்து குணமடைவதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

சூழ்நிலை காரணமாக அவர் தொடர்ந்து 5 நாட்களாக மாத்திரை போட்டுக் கொள்ளவில்லை. எனவே, நோயின் தாக்கம் அதிகரித்தது. உடனே பயந்து விட்ட பிருந்தாலட்சுமி விடுபட்ட 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் தின்றார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத், மைத்துனர் மாணிக்கவாசகத்தின் உதவியுடன் பிருந்தா லட்சுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பிருந்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications