தொடரும் இலங்கை அட்டூழியம்! ஒரே நாளில் 53 தமிழக மீனவர்கள் கைது!!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 53 பேரை ஒரே நாளில் இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனர்கள் 6 படகுகளில் நேற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை நேற்று இரவு கைது செய்த இலங்கை கடற்படை தலைமன்னார் அழைத்துச் சென்றது.
இதே போன்று பூம்புகாரைச் சேர்ந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இப்படி ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications