திருமணம் நடந்த சில மணி நேரங்களிலேயே "பிரிந்த" மணமக்கள்...!
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கும், இலங்கையில் வசித்து வரும் அவரது உறவுப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மாப்பிள்ளையை போலீஸார் அழைத்துச் சென்று விட்டனர். பெண்ணும் உறவினர்களுடன் கண்கள் கலங்க புறப்பட்டுப் போனார்.
2011 ஆம் ஆண்டு போலி ஆவணத்தில் இந்தியாவுக்கு வந்ததாக கூறி வவுனியாவைச் சேர்ந்த கிருஷ்ணலிங்கம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டார். இந்நிலையில், திருமணம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி கடந்த 8 ஆம் தேதி தமிழக அரசுக்கு கிருஷ்ணலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வவுனியாவை சேர்ந்த மணப்பெண்ணான அவரது உறவுப் பெண் வசந்தமலர் மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். இவர்களின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் எளிய முறையில் செய்யாறில் நேற்று நடைபெற்றது. பதிவாளர் அலுவலகத்துக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் மணப்பெண் வசந்தமலருக்கு தாலி கட்டிய மணமகன் கிருஷ்ணலிங்கம், பின்னர் பதிவு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தில் மணப்பெண்ணுக்கு நெருக்கமான 5 உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த சிலமணி நேரத்திலேயே கிருஷ்ணலிங்கம் பாதுகாப்புடன் செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். மணமகள் வசந்தமலர், சென்னை பல்லாவாரத்தில் உள்ள அவரின் உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கிருஷ்ணலிங்கத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனைவி வசந்தமலர் சந்திக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications