தமிழகத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! இறுதி பட்டியல் மாலையில் வெளியீடு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 894 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.
இதன்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. பிரதான வேட்பாளர்கள் யாரும் இதுவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறவில்லை.
சில தொகுதிகளில் சுயேட்சைகள் இன்று மனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது இரவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications