சட்டக் கல்லூரியை இடமாற்றக் கூடாது – தமிழக ஆளுநரிடம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு!
சென்னை: சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது பாடையில் ஒரு மாணவர் இறந்தவர் போல படுத்துக்கொள்ள அவரைச் சுற்றி 6 மாணவர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர்.
பின்பு, அந்த மாணவரை கல்லூரி வளாகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு இறந்துவிட்டது என மாணவர்கள் ஒப்பாரிவைத்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அதில், ''சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications