தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.-முத்தரசன்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. கூலிப்படை வருவது போல் போதை பொருளும் வருகிறது. மேட்டூரில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளிடம் குறைந்த அளவு மட்டும் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதிக அளவு திருப்பி அனுப்பபடுகிறது. கல்வி கடனை வசூல் செய்யும் உரிமையை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்து கண்டனத்துக்குரியது.
தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயிகள் வாங்கிய கடனை குறு சிறு என்று பார்க்காமல் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications