அம்மா புராணம் பாடும் அமைச்சர்கள் 2016ல் அனுபவிப்பார்கள்: குஷ்பு சாபம்
சென்னை: அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை என்பது இல்லை. அமைச்சர்கள் மக்களை சந்திக்காமல் அம்மா புராணத்தையே பாடுகிறார்கள். இதற்கான பலனை அவர்கள் 2016ம் ஆண்டு அனுபவிப்பார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ், மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு துன்பம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மீதான வழக்கின் காரணமாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

ஆம்பூர் சம்பவம்
ஹெச். ராஜா வீடு தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆம்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட, ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் முதல்வருக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

அம்மா புராணம்
அமைச்சர்கள் மக்களை சந்திக்காமல் அம்மா புராணத்தையே பாடுகிறார்கள். அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை என்பது இல்லை. இதற்கான பலனை அவர்கள் 2016ம் ஆண்டு அனுபவிப்பார்கள்.

உலகம் சுற்றும் மோடி
பிரதமர் நரேந்திரமோடி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்து அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இனிமேலும் அவர் பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை. ‘வியாபம்' பிரச்சினையில் உச்சநீதிமன்றம் கண்காணிப்போடு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு











Click it and Unblock the Notifications