மதுக் கடைகளை மூடக் கோரி அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவேன்.. மாணவி நந்தினி அதிரடி!
கரூர்: மதுபான கடைகளை மூட வலியுறுத்தி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப் போவதாக டாஸ்மாக் ஒழிப்பு படை அமைப்பாளாரும் சட்ட கல்லூரி மாணவியுமான நந்தினி கூறியுள்ளார்.
தமிழக மக்களை நாசமாக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் ஒழிப்புப்படை அமைப்பாளரும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நந்தினி இன்று கரூர் பேருந்து நிலைய பகுதிகளி, ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தினி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் பிபரவரி 7ம் தேதி வரை பொதுமக்களிடம் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரசுரங்களை வழங்க இருக்கிறேன்.

பிப்ரவரி 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்போகிறேன்.

இந்திய தண்டனை சட்டம் 328ன் படி போதை பொருளை ஒருவருக்கு வழங்கி தீங்கு ஏற்படுத்தினால் அதற்கு 10 ஆண்டுகாலம் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசே குற்றவாளிதான் என்றார் நந்தினி.












Click it and Unblock the Notifications