போராட்டம், தடியடி எதிரொலி: சென்னை சட்டக் கல்லூரிக்கு 7 நாள் விடுமுறை! ஹாஸ்டலுக்கும் பூட்டு
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கல்லூரிக்கு 7 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மாற்றுவதை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீஸார் தடியடியை கண்டித்து சட்ட மாணவர்கள் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட மாணவர்களை தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சட்ட மாணவர்களை விடுவிக்கவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
போராடும் சட்ட மாணவர்களுக்கு சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படலாம், மாணவர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவலாம் என்ற அச்சத்தால், அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தையொட்டி, சட்டக் கல்லூரிக்கு 7 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. மாணவ, மாணவிகள் விடுதியும் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications