காவிரி… நீல நிற ரிப்பன் அணிந்து சென்னை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சென்னை தரமணி வளாகத்தில் பயிலும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை அமைக்க மறுத்துள்ளது. மத்திய அரசின் கர்நாடக சார்பு போக்கைக் கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அரசியல் சாசன விரோதப்போக்கை கண்டித்து இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கையெழுத்துப் பேரணி நடத்தியுள்ளனர். அரசியல் சாசனப்பிரிவு 262-ன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என்றும் காவிரி முழக்கம் என்ற பெயரில் அமைதி போராட்டத்தை கடந்த 2 நாட்களாக சட்ட மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த அமைதிப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு நாட்களாக நீலநிற ரிப்பன் பட்டைகளை அணிந்து கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தின் கடைசி நாளான இன்று காவிரி பிரச்சனைத் தொடர்பான வாதங்களை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாணவர்கள் கையெழுத்து பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தின் நியாயமான, சட்டப்படியான கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கும், தமிழக கவர்னருக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் மற்றும் கர்நாடக முதலமைச்சருக்கும் தபால் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுப்ப உள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications