காவிரி… நீல நிற ரிப்பன் அணிந்து சென்னை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சென்னை தரமணி வளாகத்தில் பயிலும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை அமைக்க மறுத்துள்ளது. மத்திய அரசின் கர்நாடக சார்பு போக்கைக் கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அரசியல் சாசன விரோதப்போக்கை கண்டித்து இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கையெழுத்துப் பேரணி நடத்தியுள்ளனர். அரசியல் சாசனப்பிரிவு 262-ன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என்றும் காவிரி முழக்கம் என்ற பெயரில் அமைதி போராட்டத்தை கடந்த 2 நாட்களாக சட்ட மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த அமைதிப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு நாட்களாக நீலநிற ரிப்பன் பட்டைகளை அணிந்து கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தின் கடைசி நாளான இன்று காவிரி பிரச்சனைத் தொடர்பான வாதங்களை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாணவர்கள் கையெழுத்து பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தின் நியாயமான, சட்டப்படியான கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கும், தமிழக கவர்னருக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் மற்றும் கர்நாடக முதலமைச்சருக்கும் தபால் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுப்ப உள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications