கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் வெடித்தது போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

கோவை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியை நெருங்கிய ஓகி புயலால் அம்மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. ஓகி புயலால் கடலில் கடுமையான காற்று வீசியதோடு கொந்தளிப்புடனும் காணப்பட்டது.

Lawyers protesting in Coimbatore to rescue Kanniyakumari fisherman

புயல் குறித்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் முன்கூட்டியே கடலுக்கு சென்ற மீனவர்கள் காற்றின் வேகம் மற்றும் கடல் கொந்தளிப்பால் குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மவாட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்க ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குமரி மீனவர்களுக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓகி புயலால் மாயமான கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+