தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம்.. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி #Periyar
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம் தமிழகத்தில் இன்று பல அரசியல் கட்சி தலைவர்களாலும் அனுசரிக்கப்பட்டது.
சென்னை: தந்தை பெரியாரின் 43வது நினைவு நாள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை இன்று மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ரகுமான்கான், சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச் செயலாளர் வி.வி.துரைசாமி, தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், கு.க.செல்வம், தாயகம் கவி, வர்த்தகர் அணி கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வி.பி.மணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுகவை தனது கைப்பாவையாக செயல்பட வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பாஜக தமிழக மண்ணில் வேரூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பெரியார் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்தினர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications