சிவில்னா என்ன. கிரிமினல் கேஸ்னா என்ன.. மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய வக்கீல்கள்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (26.10.2016) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வழக்கறிஞர்கள் சேதுராமன், குமார், விஜயா, உமையாள், ராதா, செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமில் மாணவர்களுக்கு சிவில் வழக்கு, கிரிமினல் வழக்குப் பற்றி விளக்கப்பட்டது.
சாலை மற்றும் ரயில் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உரிய இழப்பீடு பெறுவது, தொழிற்சாலைகளில் விபத்துக்குள்ளனோர் நிர்வாகத்திடம் எவ்வாறு நஷ்ட ஈடு பெறுவது, சொத்து உரிமை மற்றும் வாடகை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளியில் வருதல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
உதவி நிர்வாக அலுவலர் மணிமேகலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.