சிக்கியது சிறுத்தை.. வால்பாறை மக்களை குலைநடுங்க செய்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிப்பு
வால்பாறை அருகே பெண்ணை கடித்து குதறி தின்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
வால்பாறை: ஒரு பெண்ணை கடித்து குதறி தின்றும், சிலரை காயப்படுத்தியும் வால்பாறை மக்களையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த சிறுத்தை இன்று கூண்டில் பிடிபட்டது.
வால்பாறை உள்ள சிங்கோணா எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி படுகாயங்களுடன் மாதவி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
|
இழுத்து சென்று கடித்தது
அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. இந்நிலையில், காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் 7 மணி அளவில் கைலாசவதி பெண்ணை இழுத்து சென்று ஒரு வனப்பகுதியிலுள்ள புதரில் வைத்து கடித்து குதறி தின்று கொண்டிருந்தது. பெண்ணை தேடி வந்த பொதுமக்களை கண்டதும் சிறுத்தை தப்பி ஓடியது. பெண்ணின் உடலை பாதி தின்றுவிட்ட நிலையில் மீதமுள்ள உடலை வனத்துறையினர் கைப்பற்றினர்.
— Oneindia Tamil (@thatsTamil) June 17, 2018 |
ஆர்ப்பாட்டம்-சிறைபிடிப்பு
இது வால்பாறை மக்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், சிறுத்தைகளை தடுக்க வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்து 300-க்கும் மேற்பட்டோர் பெண்ணின் சடலத்தை எடுக்க விடாமல் வனத்துறை மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அத்துடன் அரசு தேயிலை தோட்ட கழக மேலாண்மை இயக்குனரையும் சிறைபிடித்தனர்.
— Oneindia Tamil (@thatsTamil) June 17, 2018 |
சிக்கியது சிறுத்தை
இதனையடுத்து, சிறுத்தை நடமாடிய காஞ்சமலை மற்றும் சின்கோனா பகுதியில் 4 இடங்களில் வனத்துறை அதிகாரிகள் கூண்டு அமைத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களையும் அதிரடியாக பொருத்தினர். இந்நிலையில், சின்கோனா பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கூண்டில், இன்று காலையில் ஒரு ஆண் சிறுத்தை சிக்கியது.

தொடர்ந்து கூண்டு வைக்க கோரிக்கை
இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தாலும், தேயிலை தோட்டப்பகுதிகளில் மேலும் சிறுத்தைகள் இருக்க வாய்ப்பு இருக்கு என்கிறார்கள். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் கூண்டுகளை எப்போதும் வைக்க வேண்டும் என்றும், அதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications