மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை-தஞ்சை கோர்ட் அதிரடி
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Recommended Video
தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் சாகும்வரை சிறைதண்டனை அளித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது பெண்குழந்தை மனவளர்ச்சியில்லாதவர் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் மனவளர்ச்சி குன்றிய மகளை சுப்பிரமணியம் பலமுறை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். தந்தையின் துன்புறுத்தலால், மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தமிழகம் முழுவதும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை சுப்பிரமணி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படிகொடூர தந்தையான சுப்பிரமணிக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும்வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தது.