தடையை மீறுவோம்.. ஜல்லிக்கட்டை நடத்துவோம்.. 'அதிமுக' கூட்டணி நடிகர் கருணாஸ்

வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று நடிகர் கருணாஸ் சபதம் ஏற்றிருக்கிறார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் பிரபலமான விளையாட்டு மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு. பொங்கலின் போது நடத்தப்படும் இந்த விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்துவோம் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

பொங்கல் திருவிழாவின் போது, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி படுஜோராக நடைபெறும். இந்த விளையாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Lift Ban on Jallikkattu asks Karunas

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அவசரச் சட்டம், பீட்டா என்ற விலகின ஆர்வலர்களின் அமைப்பு என அனைத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஊதி பெருக்கி நடத்தவிடாமல் செய்துவிட்டது. இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசோ, மாநில அரசோ சுமூக தீர்வுகள் ஏற்படுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என்று சென்னையில் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிப் போயுள்ள டெல்டா விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+