ஜெ.வைப் போல சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் இபிஎஸ் - ஒபிஎஸ்: அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல, இபிஎஸ் - ஒபிஎஸ் சட்டம் ஒழுங்கை பராமரிக்கின்றனர் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
கோவில்பட்டி: மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவைப் போல, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரித்து வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சனிக்கிழமை கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மீனவர்கள் தற்போது கடலில் மீன்பிடிக்கச் செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மீனவர்கள் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரிய விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க அனுமதித்து உடனடியாக உத்தரவிட்டார்" என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ "மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோல தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்" என்று கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ "தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23,000 போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை. அதே போல, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.
திமுக ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதுதான், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications