லிங்கா பிரச்சினை... முழு வீச்சில் களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!
லிங்கா பிரச்சினையில் அதை விநியோகித்த சிலர் ரஜினிக்கு எதிராக மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ரஜினி ரசிகர்கள், இப்போது முழு வீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டனர்.
முதல் கட்டமாக லிங்கா விநியோகஸ்தர்கள் நடத்தும் பிச்சை போராட்டத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்து அந்தப் படம் நஷ்டம், படம் சரியில்லை, ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டது, கருணாநிதி மாதிரி இது என் கடைசி படம் என ரஜினி அறிவித்திருக்க வேண்டும், ரஜினியை நம்பினால் தெருவில் பிச்சைதான் எடுக்க வேண்டும்... என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் சில 'லிங்கா விநியோகஸ்தர்கள்'.
அவர்கள் இப்படிச் சொல்லும்போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் மனம் கொதித்தாலும், தங்கள் தலைவர் ரஜினியின் உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாமல் பொறுமை காத்தனர். பல்வேறு எதிர் போராட்டங்களை நடத்த அவர்கள் அனுமதி கேட்ட போதும், ரஜினி மன்ற தலைமை அமைதி காக்கும்படி கூறிவிட்டது.
இந்த நிலையில்தான் மெகா பிச்சைப் போராட்டத்தை, அதுவும் ரஜினி வீட்டு முன்பிருந்து ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தனர் 'லிங்கா விநியோகஸ்தர்கள்'.
இந்த அறிவிப்பு வந்தததிலிருந்து கொதித்துப் போயுள்ள ரஜினி ரசிகர்கள், பதிலுக்கு தாங்களும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகியுள்ளனர். மெகா பிச்சை போராட்டத்தை நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், அதே தேதியில் தங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாகவும், லிங்கா மூலம் இந்த விநியோகஸ்தர்கள் எப்படியெல்லாம் சம்பாதித்தார்கள் என்பதை ஆதாரங்களோடு வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் என்றில்லாமல், மாவட்டந்தோறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறார்களாம் ரஜினி ரசிகர்கள்.
முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ரசிகர்கள் சார்பாக நடக்கப் போகும் போராட்டம் குறித்து அம்மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன் செய்தித் தாள்களில் விளம்பரம் தந்துள்ளார்.
அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகளும் போராட்ட அறிவிப்பை வெளியிடப் போகிறார்களாம். மேலும் ரஜினியின் சம்மதத்துக்கு காத்திராமல் தன்னிச்சையாக இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும், லிங்கா விநியோகஸ்தர்கள் மன்னிப்புக் கேட்கும்வரை இது தொடரும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications