அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.
எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் லோக் ஆயுக்தா கொண்டு வந்ததில் மகிழ்ச்சி என்றார்.
மேலும் பலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றும் அவர் சாடினார்.
அலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். அரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள் உள்ளன என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்ததால் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை: அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.
எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் லோக் ஆயுக்தா கொண்டு வந்ததில் மகிழ்ச்சி என்றார்.
மேலும் பலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றும் அவர் சாடினார்.
அலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். அரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள் உள்ளன என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்ததால் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.