For Daily Alerts
Just In
கோவில் அரச மரத்தில் பஞ்சமுக விநாயகர் உருவம்: பக்தர்கள் பரவசம்
சென்னை: சென்னையில் அரச மரத்தில் பஞ்சமுக விநாயகர் உருவம் தெரிவதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் வளாகத்துக்கு பின்புறம் அரச மரம் உள்ளது. இந்த அரச மரத்தில் தொட்டில் கட்டி பெண்கள் வேண்டுதல் வைப்பார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண், மரத்தில் தொட்டில் கட்டியுள்ளார். அப்போது அரச மரத்தில் பஞ்சமுக விநாயகர் உருவம் போல் தெரிந்தது. உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தனர். அது பஞ்சமுக விநாயகர் உருவம் போல் இருந்தது. இதனால் அதற்கு குங்குமம், சந்தனம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மரத்தை சுற்றிலும் பாதுகாப்பாக வேலி அமைத்து பாதுகாத்தனர்.
மரத்தில் தெரியும் விநாயகர் உருவத்தை ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Comments
English summary
It was unusual sight to find a huge crowd converging before the Triplecane temple complex recently. All of them were desperate to have a glimpse of an image, which emerged on a tree and drew everyone's attention. Lord Ganesha's image attracted dozens to the high-security zone.