Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை

ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆரணி அருகே தாய், மகளை கொலை

    ஆரணி: ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜம்புகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).

    திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நிர்மலா படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேலின் மகன் அன்பழகன் (35) நிர்மலாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார். இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    பணஉதவி

    பணஉதவி

    இந்நிலையில் நிர்மலாவை படிப்பு முடிந்தவுடன் அன்பழகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக சிவராமனும், சாமுண்டீஸ்வரியும் உறுதி அளித்தனர். இதை நம்பி நிர்மலாவின் படிப்புக்கும் அன்பழகன் பணஉதவி செய்து வந்தார்.

    கல்யாணம்

    கல்யாணம்

    இதனிடையே சென்னையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார் அன்பழகன். இதையடுத்து நேற்று முன் தினம் சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற அன்பழகன், நிர்மலாவை கல்யாணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

    கத்தியால் வெட்டு

    கத்தியால் வெட்டு

    அப்போது சிவராமன் தம்பதியினர் அன்பழகனுக்கு நிர்மலாவை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அன்பழகன் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். எனினும் அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த அன்பழகன் , சிவராமன் வீட்டுக்கு சென்று வெளியே படுத்திருந்த சிவராமனையும், தாழ்வாரத்தில் படுத்திருந்த சாமுண்டீஸ்வரியையும் கத்தியால் வெட்டினார்.

    திருவண்ணாமலை மருத்துவமனை

    திருவண்ணாமலை மருத்துவமனை

    பின்னர் உள்ளே நிர்மலாவின் அறைக்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். இதையடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். சிவராமன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை நேற்று சிலர் பார்த்துவிட்டு அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னி விசாரணை நடத்தினார். திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் கண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+