ஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை
ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

ஆரணி: ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜம்புகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நிர்மலா படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேலின் மகன் அன்பழகன் (35) நிர்மலாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார். இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

பணஉதவி
இந்நிலையில் நிர்மலாவை படிப்பு முடிந்தவுடன் அன்பழகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக சிவராமனும், சாமுண்டீஸ்வரியும் உறுதி அளித்தனர். இதை நம்பி நிர்மலாவின் படிப்புக்கும் அன்பழகன் பணஉதவி செய்து வந்தார்.

கல்யாணம்
இதனிடையே சென்னையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார் அன்பழகன். இதையடுத்து நேற்று முன் தினம் சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற அன்பழகன், நிர்மலாவை கல்யாணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

கத்தியால் வெட்டு
அப்போது சிவராமன் தம்பதியினர் அன்பழகனுக்கு நிர்மலாவை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அன்பழகன் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். எனினும் அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த அன்பழகன் , சிவராமன் வீட்டுக்கு சென்று வெளியே படுத்திருந்த சிவராமனையும், தாழ்வாரத்தில் படுத்திருந்த சாமுண்டீஸ்வரியையும் கத்தியால் வெட்டினார்.

திருவண்ணாமலை மருத்துவமனை
பின்னர் உள்ளே நிர்மலாவின் அறைக்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். இதையடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். சிவராமன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை நேற்று சிலர் பார்த்துவிட்டு அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பரபரப்பு
இந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னி விசாரணை நடத்தினார். திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் கண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications