கரூர் அருகே குடிசைக்குள் புகுந்த கோழி ஏற்றிச் சென்ற லாரி: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே குடிசைக்குள் லாரி புகுந்ததில் 2 பேர் பலியாகினர், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. இங்கு மணல் ஏற்ற வரும் லாரிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த நடேசன், வீரவல்லியைச் சேர்ந்த பொன்னர், ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த கலைசெல்வன் மற்றும் ரகு, வடசேரியைச் சேர்ந்த ரமேஷ், முசிறி மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன், புலியூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பணி முடிந்ததும் அருகில் உள்ள குடிசைக்குள் தூங்குவது வழக்கம். அது போலத்தான் அன்றும் அவர்கள் தூங்க சென்றனர்.

இந்த நிலையில் கரூர்-திருச்சி பைபாஸ் ரோட்டில் சாலை ஓரத்தில் உள்ள அந்த குடிசையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, பல்லடத்தில் இருந்து திருச்சிக்கு கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி தண்ணீர்பள்ளி அருகே வந்த போது சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதியது. இதில் நிலை தடுமாறி லாரி மணல் லாரி போக்குவரத்தை சரிசெய்யும் நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த குடிசைக்குள் பாய்ந்தது.

இதில் மணல் குவாரி தொழிலாளர்கள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர். நடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னர் என்பவர் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 5 பேரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணல் குவாரிகளால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாகவும், அந்த இடத்தில் இருந்து உடனே மணல் குவாரியை மாற்ற வேண்டும் என திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+