நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலை... தமிழகம், புதுவையில் இன்றும் கனமழை பெய்யும்..
Subscribe to Oneindia Tamil
சென்னை: குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையில் தமிழகம், புதுவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

அந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டது. இதனால் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும். புதுச்சேரியிலும் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications