கோடை மழைக்கு தயாராகுங்கள் தமிழக மக்களே.. வெயிலின் தாக்கம் குறையுமா?
தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தற்போது பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படுகிறது.

எதிர்வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழத்தில் வருகிற மார்ச் முதல் வாரம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த எந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் கடந்த 17ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் மழை பற்றி பதிவு செய்திருந்தார். அதில் தமிழகத்தின் வேண்டுதலை இவ்வளவு சீக்கிரம் கடவுள் நிறைவேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை . ஜனவரி மாதம்போல் பிப்ரவரி மாதம் இல்லை. பிப்ரவரி மாதம் மாநிலத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் செல்ல போகிறது . ஆனால், மேகங்களின் நகர்வுகளை வைத்துப் பார்க்கும்போது வருகிற மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
அதுபோலவே சென்னை வானிலை ஆய்வு மையமும் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று அறிவுத்துள்ளது. இதனால் தமிழகத்தில வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications