ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை - ஜவாஹிருல்லா
ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் நிறுவனத்திற்கு தடைவிதித்திருப்பது மத சுதந்திரத்தை தடை செய்யும் மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, மும்பையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனமான 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்' (ஐ.ஆர்.எப்) என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டேசன் பெற்ற வெளிநாட்டு பணங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது கண்கூடாக தெரிந்த பிறகு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் உரிமம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மைகளை ஒத்துக் கொள்ள மறுத்த திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உரிமத்தை புதுப்பித்த
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜி.கே. திவிவேதி உள்ளட்ட நான்கு அதிகாரிகளை பதவி இடைநீக்கம் செய்தது. துருவி துருவி ஆய்வுச் செய்த போதினும் எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையில் மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்தின் மீது 5 ஆண்டு கால தடைவிதித்திருப்பது மத்திய அரசின் சிறுபான்மை விரோத போக்கின் அப்பட்டமான சாட்சியமாக விளங்குகிறது.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரது பேச்சுகளால் துண்டப்பட்டு சிலர் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தடைக்கான காரணங்களாக குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில் மத்திய அரசு மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடைவிதித்திருப்பது அதன் வஞ்சக செயல்பாட்டின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
ஜாகிர் நாயக்கின் நிறவனத்தை தடைச் செய்ய மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் அனுமானங்கள் தான். இதே நெறிமுறையை பயன்படுத்தினால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம், விஎச்பி, அபினவ் பாரத் உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பேச்சுகளும் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் பயங்கர ஆயுதங்களை காண்பித்துக் கொண்டே நாட்டு மக்களை இந்த அமைப்புகள் அச்சுறுத்தி வருகின்றனர். இத்தகைய அமைப்புக்ள தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைச்செய்யப்பட்டிருக்க வேண்டும். .
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொடர் முஸ்லிம் விரோதப் போக்கால் சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தற்போது எவ்வித நியாயமான காரணங்களின்றி வெறும் அனுமானங்களின் அடிப்படையில் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் தொண்டு நிறுவனமான இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டேஷனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை பறிக்கும் வஞ்சக நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தத் தடையை திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications