ஜல்லிக்கட்டை காண மதுரை வந்தடைந்தார் மு.க. ஸ்டாலின் !
இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நேற்று மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் முழு மூச்சாய் நின்று பெரும் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

அலங்காநல்லூரில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அலங்காநல்லூர் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. அதேபோல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதனால் ஜல்லிக்கட்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வமோ, சசிகலாவோ கலந்து கொள்வதாக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்தது. இப்படியொரு உற்சாகமான நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் சென்னையை விட்டு நகர முடியாத சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடக்கவுள்ளது. இதற்காக நேற்று இரவே மதுரை வந்துவிட்டார் ஸ்டாலின். இன்று காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications