Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பையை போல அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்... நமக்கு நாமே பயணத்தில் பேசிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டது போன்று, ஆட்சியில் உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆர்.கே.நகரில் நமக்கு நாமே 4ம் கட்ட பயணத்தைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரை 3 கட்டமாக பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.

தொழிலாளர்கள், மகளிர் குழுவினர், மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தற்போது சென்னை ஆர்.கே.நகரில் 4ம் கட்ட பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

212 தொகுதிளில் நமக்கு நாமே

212 தொகுதிளில் நமக்கு நாமே

கடந்த ஆண்டு 212 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சந்திப்பை, ஸ்டாலின் நிறைவு செய்துள்ளார். இவர் இதுவரை 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்துள்ளார்.

சென்னையில் 4ம் கட்ட பயணம்

சென்னையில் 4ம் கட்ட பயணம்

சென்னையில் இன்று நான்காம் கட்ட பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 5வது தெருவில் உள்ள நாடார் உறவின் முறை திருமண மண்டபத்தில் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து பேசினார் ஸ்டாலின்.

ஆர்.கே.நகரில் ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் துப்புரவு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்று உறுதியளித்தார்.

4 லட்சம் மனுக்கள்

4 லட்சம் மனுக்கள்

துப்புரவு பணியாளர்கள் நலவாரியம் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதுவரை பயணம் செய்த 212 தொகுதிகளில் 4 லட்சம் மனுக்களை மக்கள் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆட்சியை அகற்றுங்கள்

ஆட்சியை அகற்றுங்கள்

சென்னையில் குப்பைகளை அகற்றியதைப் போல அதிமுக ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் கூறிய ஸ்டாலின், 2016ம் ஆண்டில் திமுக ஆ‌ட்சியை பொதுமக்கள்தான் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதினால் போதுமா?

கடிதம் எழுதினால் போதுமா?

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முதல்வர் கடிதம் மட்டும் எழுதினால் போதாது. முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் குழுக்கள் நேரில் சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

பலமான கூட்டணி

பலமான கூட்டணி

தே.மு.தி.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? இல்லையா? என்பதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் வாக்குறுதி மற்றும் வியூகம் குறித்து உரிய நேரத்தில் தலைவர் கருணாநிதி அறிவிப்பார்.

வாட்ஸ் அப் வதந்தி

வாட்ஸ் அப் வதந்தி

செம்பரம்பாக்கம் ஏரி திறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நேற்று போராட்டம் நடத்தியபோது அதை திசை திருப்புவதற்காக பள்ளிகளில் வெடிகுண்டு புரளியை வாட்ஸ்அப் மூலமாக ஆளுங்கட்சியினர் பரப்பியதாக நான் சந்தேகப்படுகிறேன் என்றும் கூறினார் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+