பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிடக் கூடாது: ஸ்டாலின்
உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிவிடக் கூடாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத் துறை சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.

ஊடக சுதந்திர நாளில் இதனை நினைவூட்ட விரும்புகிறேன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கருணாநிதியின் வழிகாட்டுதலில் நடைபோடும் திமுக சார்பில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு அஞ்சாமல், நிறை-குறைகளை சரியாக எடைபோட்டு, நேரங்காலம் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்த செய்திகளை எடுத்துரைக்கும் பெரும்பணியினை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான் இந்த நாளில் நினைவுகொள்ள வேண்டிய செய்தியாகும்.
அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு, ஜனநாயகக்காற்றை தொடர்ந்து வீசச் செய்யும் போராட்டத்தை பேனா என்ற ஆயுதத்தின் மூலம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவாயுதம் நடுநிலை தவறாமல் செயல்பட்டு எளிய மக்களின் நண்பனாகத் திகழ வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications