For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேஜர் முகுந்த் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது: மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த மேஜர் முகுந்தின் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது என்று திமுக செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முககுந்த வரதராஜன் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார்.

M.K.Stalin meets Major Mukunth’s family…

சென்னை கிழக்கு தாம்பரம் புரபசரஸ் காலனியில் வசித்து வரும் மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்துரிபெக்கா வர்கீஸ், அவரது மூன்று வயது மகள் அர்ஷியா, தந்தை வரதராஜன், தாய் கீதா ஆகீயோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த மேஜர் முகுந்தின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து வீரமரணமடைந்த சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுக்காக அவர் செய்த இந்த உயிர் தியாகம், அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறினாலும் போதாது. நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்து வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

English summary
DMK Secretary M.K.Stalin says that there is no more words to comfort to Major Mukunth’s family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X