பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ: ஸ்டாலின் புகழாரம்- அழகிரி அஞ்சலி
பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ என்று திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோ ராமசாமி இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது உயிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது.

பத்திரிகை, நாடகம், நடிகர், வழக்கறிஞர் என பன்முகத் துறையில் திறமை பெற்றவராக சோ விளங்கினார். துக்ளக் என்ற பிரபல அரசியல் வார இதழை கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது பணியை விடாது செய்து வந்தார் சோ.
வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் சோ. 14 திரைப்படங்களுக்கு கதாசிரியரான சோ, 4 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமடைந்தார் சோ.ராமசாமி.
சோ உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்களும், திரை உலக, பத்திரிகை உலக நண்பர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு, இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சோ உடலுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், நடிகர் ஒய்.ஜி மகேந்திரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சோவின் உடலுக்கு இன்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பத்திரிகை துறையின் மிகச்சிறந்த ஜாம்பவானாக திகழ்ந்தவர் சோ என்று புகழாரம் சூட்டினார். திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் சிறந்த பண்பாளர் என்றும் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று நேரில் வந்து சோ உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகச்சிறந்த அறிவாளி சோ என்று கூறினார். தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அரசியல் சாணக்கியராக திகழ்ந்தவர் என்று அழகிரி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications