பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ: ஸ்டாலின் புகழாரம்- அழகிரி அஞ்சலி
பத்திரிகை துறையில் மிகச்சிறந்த ஜாம்பவான் சோ என்று திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோ ராமசாமி இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது உயிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது.

பத்திரிகை, நாடகம், நடிகர், வழக்கறிஞர் என பன்முகத் துறையில் திறமை பெற்றவராக சோ விளங்கினார். துக்ளக் என்ற பிரபல அரசியல் வார இதழை கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது பணியை விடாது செய்து வந்தார் சோ.
வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் சோ. 14 திரைப்படங்களுக்கு கதாசிரியரான சோ, 4 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமடைந்தார் சோ.ராமசாமி.
சோ உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்களும், திரை உலக, பத்திரிகை உலக நண்பர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு, இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சோ உடலுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், நடிகர் ஒய்.ஜி மகேந்திரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சோவின் உடலுக்கு இன்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பத்திரிகை துறையின் மிகச்சிறந்த ஜாம்பவானாக திகழ்ந்தவர் சோ என்று புகழாரம் சூட்டினார். திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் சிறந்த பண்பாளர் என்றும் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று நேரில் வந்து சோ உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகச்சிறந்த அறிவாளி சோ என்று கூறினார். தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அரசியல் சாணக்கியராக திகழ்ந்தவர் என்று அழகிரி கூறினார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications