‘வேந்தர் மூவிஸ்’ மதன் உயிரோடு தான் இருக்கிறார்- ஹைகோர்ட்டில் போலீஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான வேந்தர் மூவிஸ் மதன் உயிரோடு தான் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கு...

வழக்கு...

இதற்கிடையே தன் மகன் மதனைக் கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மதனைத் தேடும் பணி தீவிரமானது.

விசாரணை...

விசாரணை...

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே போலீசார் நீதிமன்றத்தில் கால அவகாசம் வேண்டியிருந்தனர். அதன்படி, கால அவகாசம் முடிந்து இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நெருங்கி விட்டோம்...

நெருங்கி விட்டோம்...

அப்போது போலீசார் அளித்த விளக்கத்தில், "மதன் உயிரோடு தான் இருக்கிறார். அவரது இருப்பிடத்தை நெருங்கி விட்டோம். எனவே மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும்" எனக் கோரினர்.

மீண்டும் கால அவகாசம்...

மீண்டும் கால அவகாசம்...

இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, ‘இனி மேல் கால அவகாசம் கேட்கக் கூடாது' என போலீசாரை எச்சரித்து ஒரு மாதத்திற்கு பதில் 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 17 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+