மதன் விடுதலைக்காக வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வேண்டிய மனைவி, தாயார்
வழக்குகளில் இருந்து விடுதலையாவத்தாற்காக மதனின் மனைவியும் அவரது தாயாரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டனர்.
சென்னை: எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார் என்பது மதன் மீதான புகார். பணத்தை மருத்துவ கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன் என்றும் கங்கையில் போய் ஜலசமாதியாகப் போகிறேன் என்றும் கூறிவிட்டு மாயமான மதனை 6 மாதங்களுக்குப் பின்னர் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
21ம் தேதி கைது செய்யப்பட்ட மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மதன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல சினிமா தயாரிப்பார்கள், நடிகர்கள், எஸ்.ஆர். எம் நிறுவன தலைவர் பச்சமுத்து, அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விளக்கம் கேட்கப்பட்டது.
நேற்றுடன் அவரது 7 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால் மதனை மீண்டும் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன் ஆஜர்படுத்தினார்கள். மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதனை கோர்டுக்கு அழைத்து வந்ததை அடுத்து அவரது மனைவி, தாயார் ஆகியோர் வந்திருந்தனர். வேனில் ஏற்றிய மதனை, அவரது மனைவி வேன் அருகே சென்று பார்த்து பேசினார்.
மதன் விரைவில் வழக்கில் இருந்து விடுபட வேண்டும் சைதை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் கோவிலில் மதனின் தாயாரும், மனைவியும் என்று வேண்டிக்கொண்டனர்.
வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாகும். முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது அதிமுக வழக்கறிஞர் அணியினர் இந்த அம்மனை வேண்டி வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications