For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப். 16ஆம் தேதி ஜெயலலிதா சடலமாக அப்பல்லோவில் அனுமதி - மதுசூதனன் சர்ச்சை - வீடியோ

கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியன்றே ஜெயலலிதா சடலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா வேலூரில் நடைபெற்றது. இதில் பேசிய மதுசூதனன், ஜெயலலிதா செப்டம்பர் 16ஆம் தேதியே சடலமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார். அதை அருகில் இருந்தவர்களும் சலனமற்று கேட்டுக்கொண்டிருந்னர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதியன்று மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பங்கேற்றார் ஜெயலலிதா. மறுநாள் அதாவது 22ஆம் தேதியன்று இரவுதான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

Madhusoothanan talks controversy speech in Vellore

இது ஊராறிந்த விசயம். இப்படியிருக்கையில் மதுசூதனன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த போது, இதே மதுசூதனன்தான் அம்மா நன்றாக இருக்கிறார் என்று பேட்டி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 16ஆம் தேதியே ஜெயலலிதா சடலமாகிவிட்டதாக கூறினால், செப்டம்பர் 21, 2016 அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்றது ஜெயலலிதாவின் ஆவியா என்பதை மதுசூதனன் விளக்குவாரா?

English summary
AIADMK leader Madhusoothanan contravarcy speech in ADMK function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X