ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்யலாமா?.. ஜெ.வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு கூறி தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காக சென்னை ஆர். கே நகரில் அதிமுக உறுப்பினராக இருந்த வெற்றிவேல் ராஜினாமா செய்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் கொண்டு வரப்பட்டது. அதில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலின்போது, சுரேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளூபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் வேட்புமனு முறையாக முன்மொழியப்படவில்லை எனவும், ஆர்.கே.நகர் தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் எனக்கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார் சுரேஷ். ஆனால் அம்மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா விசாரணை செய்தார். அப்போது, ஆர்.கே.நரில் தனது மனுவை முறையாக பரிசீக்கவில்லை என சுரேஷ் தரப்பு வக்கீல் வாதிட்டார். இதைத் தொடர்ந்து 4 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தேர்தல் ஆணையம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications