பரோலில் செல்ல நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர் திருநெல்வேலியில் உள்ள தனது தந்தை படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அதனால் அருகில் இருந்து கவனித்து கொள்ள ஒரு மாதம் காலம் பரோல் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து வந்தனர். அப்போது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications