ஜல்லிக்கட்டு போராட்டத்தால் தேர்வுகளை ஒத்திவைத்தது சென்னை பல்கலைக்கழகம்
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். மாணவர்கள் முன்னேடுத்து செல்லும் இந்த போராட்டத்தால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதி நடத்த இருந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. அதன்படி 21,22ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 28,29ஆம் தேதி நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications