இடைத்தேர்தல்ல அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க..ஆர்.கே.நகர் மக்களுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்..
சென்னை : ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வபாக்களிக்குமாறு மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வரும் அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கிறார்.
அவர் உலகத்திலே வாழுகின்ற ஒட்டு மொத்த தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவியாக அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலராக, சமய நல்லிணக்கத்தின் பேரரசியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, எதிரிகளின் சூழ்ச்சி வலைகளைத் தவிடு பொடியாக்கி, நெருப்பாற்றில் வந்த சிங்கமாக தமிழக மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்ட அம்மாவை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் இந்தியத் திருநாடே இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications