மதுரை ஆதி காலத்து அல்வா கேள்விப் பட்டதுண்டா..
உலகின் மூத்த நகரம் என்ற சிறப்பைக் கொண்ட மதுரையின் மற்றுமொரு சிறப்பு ஆதி காலத்து அல்வா. ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா வை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்திலோ அல்லது நேரடியாகவோ வாங்கி உண்டு ரசித்திருப்போம் ஆனால் அதனின்று வேறுபட்டு நின்றாலும் தனக்கென தனித்துவமான ருசியும், மணமும் கொண்டது இந்த ஆதி காலத்து அல்வா.
மதுரையில் நான்கு தலைமுறையினராக நடத்திவரப்படுகிறது என்பதும் ஆச்சர்யமான தகவல். கடைவழியாக செல்வோர் மிதந்துவரும் அல்வாவின் நெய்வாசத்தில் ஒரு கணம் நின்று செல்லவைக்கிறது. மற்றபடி இந்த கடைக்கு எந்த விளம்பரங்களும் கிடையாது. சுத்தமான நெய்மட்டுமே கொண்டு தயாரிப்பதுதான் இந்த அல்வாவின் ஸ்பெஷல்.
தரம் தான் இந்த ஆதிகாலத்து அல்வா கடையின் பலமே. என்னதான் அல்வா பிரபலம்னாலும் கடைக்கு வர்றவங்ககிட்ட எடுத்ததும் ஆர்டர் எடுப்பதில்லை. காரம், அல்வா இதில் எதை கேட்கறாங்களோ இதில் கொஞ்சம் ருசி பார்க்கிறதுக்கு கொடுத்து அவங்க சாப்பிட்டு திருப்தியாக தலையசைத்தபின் பின் அவங்க கேட்டதை கட்டித் தருவதை இன்றளவும் வழக்கமாக வெச்சிருக்காங்க.
ஒரு முறை குறிப்பிட்ட அளவு அல்வா தயாரிக்க குறைந்தபட்சம் 6 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். முதல்நாள் கோதுமையை ஊற வைப்பது, பால் எடுப்பது, புளிக்கவைப்பது, பின் செயல்முறைகள் என்று ஒவ்வொரு நாளும் பக்குவமாக தயாரிக்கின்றனர்.
நம்மை ஆட்படுத்தி அடிமை கொள்ள வைக்கும் சுவை கொண்ட இந்த ஆதி காலத்து அல்வா தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்ய வசதி செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரின் சிறப்பான உணவுகளை மக்களிடையே கொண்டு வந்து சேர்க்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் தங்களது பட்டியலில் தற்பொழுது ஆதி காலத்து அல்வாவையும் சேர்த்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள் வீட்டில் இருந்த படியே ஆதிகாலத்து அல்வாவை ருசித்து மகிழுங்கள்.
கேஷ் ஆன் டெலிவரி வசதியும் இருப்பதால் ஆர்டர் செய்து விட்டு வீட்டில் டெலிவெரி செய்யும் பொழுது அதற்கான தொகையை செலுத்தி விடலாம். இன்றே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இல் ஆர்டர் செய்யுங்கள் ஆதிகாலத்து அல்வாவை குழந்தைகளுடன் ருசித்து மகிழுங்கள்.