குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது.. ஐ.நா குழுவிற்கு ஹென்றி திபேன் கடிதம்!
திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் சட்டவிரோதமானது என ஜ.நா குழுவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மதுரை : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் இலங்கைப் போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அனுமதியின்றி மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இடைக்கப்பட்ட அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து மதுரையில் மனித உரிமைகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்தார்.

உள்நோக்கத்துடன் கைது
அப்போது உள்நோக்கத்துடனே 4 பேரும் கடந்த 29ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டம் முன்கூட்டியே மாநில அரசால் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அனுமதி தேவையில்லை
மனித உரிமைகளை காக்கும் பொருட்டு அமைதியான வழியில் நடக்கும் போராட்டத்திற்கு யாரிடமும் அனுமதிபெறத் தேவையில்லை. தேவையெனில் மற்றவர்களையும், பங்கேற்பாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தான் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இங்கு அமைதியான வழியில் போராடியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகள் அமைதியாக நிகழ்ச்சி நடத்த தடை போட முடியாது என்பதோடு ஒன்றுகூடல் கூட்டத்திற்கு இது எதிரானது.

அஞ்சமாட்டோம்
திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கு மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போராடுபவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. இதற்கெல்லாம் அஞ்சி நாங்கள் எங்கள் போராடும் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் அரசு திருமுருகன் காந்திக்கு எதிராக போட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஜ.நாவிற்கு கடிதம்
இதையும் மீறிமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது வழக்குகள் போடுவது தொடருமானால் தன் மீது வழக்கு போடட்டும் என்று திபேன் தெரிவித்தார்.
மேலும் திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் திபேன் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications