ஆசன வாயில் 330 கிராம் தங்கத்தை பதுக்கி வந்த பயணி மதுரை ஏர்போர்ட்டில் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: இலங்கையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் தனது ஆசன வாயில் ரூ. எட்டரை லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது . அவரை பின்னர் போலீஸார் கைது செய்தனர்.
மதுரைக்கு கொழும்பிலிருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று மாலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது 3 பேர் மீது சந்தேகம் வந்தது.
இதையடுத்து அவர்களை அதிகாரிகள சோதனையிட்டனர். அப்போது அதில் ஒருவரின் ஆசன வாயில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். மொத்தம் 330 கிராம் தங்கக் கட்டிகளை அவர் பதுக்கி வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ. எட்டரை லட்சம் ஆகும். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications