பொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை 4 நாட்கள் எடுத்து காவலில் விசாரிக்க, போலீசாருக்கு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், அட்டாக் பாண்டி மும்பையில் அண்மையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தில் போலீசார் நேற்று முன் தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றபோது, சுப்ரமணியபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைசாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அட்டாக் பாண்டியின் தூண்டுதலின் பேரிலேயே, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக, ஏற்கனவே கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தபோது, 16 செல்போன்கள் மற்றும் 3 ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
எனவே, வழக்கினை முன்னெடுத்துச்செல்ல அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறும் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, அட்டாக் பாண்டியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு, நீதிபதி பால்பாண்டி அனுமதி அளித்தார்.
மேலும் வரும் 27 ஆம் தேதி, அதிவிரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன்பு அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications